கோட் வசூல் வெற்றியைக் கொண்டாடிய விஜய்!
கோட் வெற்றியை நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.
விஜய்யின் ’கோட்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே செப். 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஓடிடி வெளியீட்டிற்குப் பின்பும் திரையரங்குகளில் 50-வது நாளை கோட் பதிவு செய்திருக்கிறது.
மேலும், உலகம் முழுவதும் கோட் படம் ரூ. 455 கோடி வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் திரையரங்க பங்கீட்டுத் தொகையாகவே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா, விநியோகிஸ்தர் ராகுல் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.