நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்.
தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது.
அடுத்ததாக தனுஷ் நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தில் நாயகனாக தனுஷும் அவருக்கு வில்லனாக அருண் விஜய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் செல்வனும் நடிக்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் ரூ. 120 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.