நடிகர் விக்ரம் அடுத்தடுத்து 4 திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தங்கலான், வீர தீர சூரன் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அஷ்வின் மடோன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பார் என அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்படம் சில காரணங்களால் தாமதமாகி வருகிறது.
இதற்கு முன்பாக, இயக்குநர் பொடி கே ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படம் மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகிறது. இதற்கான, முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் விக்ரம் அடுத்தடுத்த 4 திரைப்படங்களில் வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்ததுடன் கடந்த ஓராண்டாக நல்ல கதைகளைக் கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.