வேட்டையன் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அமிதாப் பச்சன் குரல்!
வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தவிருக்கிறார்கள்.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
லைகா தயாரித்த இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சென்னையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா, ரித்திகா சிங் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சூர்யா 44 படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் சத்யதேவ் பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னோட்ட விடியோவில் அவரது குரலுக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதைக் கருத்தில்கொண்டு படக்குழு ஏஐ உதவியுடன் அமிதாப் பச்சன் குரலை அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்தவிருக்கிறார்கள்.
வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சமீபத்தில் வெளியாகி 20 மில்லியன் (2 கோடி) யூடியூப் பார்வைகளைக் கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.