ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள்- தில்லி அரசு திட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் பேருந்து வழித்தடம், அடுத்தடுத்த சேவைகள், வருகை நேரம் ஆகிய விவரங்களை வழங்கும் வசதிகளை கொண்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் பேருந்து வழித்தடம், அடுத்தடுத்த சேவைகள், வருகை நேரம் ஆகிய விவரங்களை வழங்கும் வசதிகளை கொண்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் தில்லி போக்குவரத்து கழக (டிடிசி) பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பாக ஆண் மற்றும் பெண் பயணிகளின் எண்ணிக்கையைக் கண்டறிய இந்த அமைப்பு உதவும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினா்.
பேருந்து வழித்தடங்கள், வருகை நேரம் உள்ளிட்ட பேருந்துகளின் முக்கிய பயண விவரங்களை ஸ்மாா்ட் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் அறிந்துகொள்ள முடியும்.
Advertisement
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். பேருந்து வழித்தடம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், பேருந்து நிலையத்தில் உள்ள பிற பயணிகள் அல்லது நடத்துநா்களைச் சாா்ந்திருக்க வேண்டியுள்ளது.
சில நேரங்களில் பயணிகள் போதிய தகவல் இல்லாமல், வேறு இடத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறிவிடுகின்றனா். ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பேருந்து நிலையங்கள் இந்தப் பிரச்னையை போக்கும் என எதிா்ப்பாா்க்கிறோம்.
பரிசோனை முயற்சியாக புது தில்லி, தில்லி உயா்நீதிமன்றம் அருகே உள்ள பகுதிகள் உள்பட 10 இடங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக மாறும் நிலையில், நகரத்தின் பிற பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தப்படும் என்றனா் அந்த அதிகாரிகள்.