சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி?!
நடிகர் கார்த்தி - சுந்தர். சி இணையும் புதிய படம் பற்றி...
சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வருகிற மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
அடுத்ததாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 படத்தில் நடித்து வரும் கார்த்தி தனது 29-வது படமாக டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், சர்தார் - 2 படத்திற்குப் பிறகு இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரண்மனை - 4, மதகஜராஜா என தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் கேங்கர்ஸ் படத்தை இயக்கி நடித்துள்ள சுந்தர். சி அடுத்ததாக மூக்குத்தி அம்மன் -2 படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தை முடித்த பின்னர் அவர் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர்.
இந்தாண்டு முடிவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | எஸ்.பி.பி, அஜித் குமார்... இளையராஜா செய்வது சரியா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.