செய்திகள்

புதிய சீரியல் வருகை: பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொடர்பாக...

DIN

விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியலின் வருகையால் பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

சிறகடிக்க ஆசை, ஐய்யனார் துணை உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.

நீ நான் காதல் தொடர் நிறைவடையவுள்ள நிலையில், இத்தொடர் ஒளிபரப்பாகும் மாலை 6 மணிக்கு ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

புதிய தொடரான பூங்காற்றுத் திரும்புமா தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

மகாநதி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இத்தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

வரும் ஏப். 28 ஆம் தேதி இந்த புதிய நேரத்தின்படி தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: டிஆர்பியில் முதல்முறை நடந்த மாற்றம்! சிறகடிக்க ஆசை தொடருக்கு வரவேற்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதபுரத்தில் முதல்வர் திறந்து வைத்த, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப்பணிகள் முழுவிவரம்!

ஜடேஜா - துருவ் ஜுரேல் அசத்தல் அரைசதம்: வலுவான நிலையில் இந்தியா!

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

கரூர் பலி: குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச் செயலர் ஆறுதல்!

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

SCROLL FOR NEXT