FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிஆர்பியில் முதல்முறை நடந்த மாற்றம்! சிறகடிக்க ஆசை தொடருக்கு வரவேற்பு!

தொடர்களின் இந்த வார டிஆர்பி விவரம்.

18 ஏப்ரல் 2025, 4:29 pm IST
சிறகடிக்க ஆசை தொடர் போஸ்டர்
பகிர்:

சிறகடிக்க ஆசை தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடர் முதல்முறையாக டிஆர்பி புள்ளிகளில் 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்தவகையில், தொடர்களின் இந்த வார டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

சிங்கப் பெண்ணே தொடர் 9.28 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று முடிச்சு தொடர் 9.05 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கயல் தொடர் 8.51 டிஆர்பி புள்ளிகளுடனும் மூன்றாம் இடத்தில் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் 7.93 டிஆர்பி புள்ளிகளுடன் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மருமகள் தொடர் 7.91 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல் தொடர் 7.20 டிஆர்பி புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. அன்னம் தொடர் 7.04 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.

அய்யனார் துணை தொடர் 6.62 டிஆர்பி புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும் பாண்டியன் ஸ்டோர் தொடர் 6.25 டிஆர்பி புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்திலும் உள்ளது.

சின்ன மருமகள் தொடர் 5.53 டிஆர்பி புள்ளிகளுடன் பத்தாம் இடத்தில் உள்ளது.

வாரந்தோறு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 4 இடங்களைப் பிடித்து வந்த நிலையில், முதல்முறையாக விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிக்க: மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments