அனிமல், மார்கோ படங்களைவிட வித்தியாசமான வன்முறை..! ஹிட் 3 படம் குறித்து நானி!
நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படம் குறித்து அவர் பேசியதாவது...
அனிமல், மார்கோ படங்களைவிட ஹிட் 3 படத்தின் வன்முறை வித்தியாசமானதாக இருக்குமென நானி கூறியுள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப் படமானது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
Advertisement
Advertisement
சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஹிட் படத்தின் முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்றன.
ஹிட் 3 படத்துக்கு ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் வன்முறை அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மார்கோ, அனிமல் படத்தினை விட இந்தப் படத்தின் வன்முறை வித்தியாசமாக இருக்குமெனக் கூறப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
நேர்காணல் ஒன்றில் நானி பேசியதாவது:
ஹிட் 3 படத்தின் வன்முறை அதிகமாக இருப்பதாக டிரைலரில் தெரியும். ஆனால், படமாக பார்க்கும்போது வேறுமாதிரி இருக்கும்.
விவரணைகளுடன் விசாரணை செய்துகொண்டே த்ரில்லர் கதையாக பயணிக்கும் இந்தப் படத்தில் வன்முறை வேண்டுமென்றே இருப்பதாகத் தெரியாது.
கதையில் அடுத்து என்ன நிகழ்கிறது, ஏன் அப்படி நடக்கிறது? என சுவாரசியமாக பயணிக்கும் இந்தப் படத்தில் வரும் வன்முறைக்கு நீங்களே கை தட்டல் அளிப்பீர்கள்.
எழுத்து நன்றாக இருக்கும்போது இப்படியான விஷயங்கள் நடக்கும். திரையரங்கில் நல்ல அனுபவத்தை அளிக்கும். அனிமல் படமும் இதைச் செய்தது. மார்கோ பார்க்கவில்லை. இந்தப் படத்தின் கதை வேறுமாதிரி இருக்கும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.