FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் மிஷன் இம்பாசிபிள்!

உலகப் புகழ்பெற்ற மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் வெளியீட்டைப் பற்றி...

25 ஏப்ரல் 2025, 9:21 pm IST
மிஷன் இம்பாஸிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் படத்தில்... - dinamani
பகிர்:

மிஷன் இம்பாசிபில் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகின்றது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் அதிரடி ஸ்டண்டுகளுக்கு புகழ்பெற்ற மிஷன் இம்பாசிபில் திரைப்படங்களின் 8வது பாகமான மிஷன்: இம்பாசிபில் - தி ஃபைனல் ரெக்கனிங் படத்தின் டிரைலர் கடந்த ஏப்.7 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள மிஷன் இம்பாசிபில் படங்கள் மற்றும் டாம் க்ரூஸின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு புதிய உற்சாக அறிவிப்பை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமௌண்ட் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

எட்டாவது பாகமான மிஷன்: இம்பாசிபில் - தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் உலகளவில் வரும் மே.23 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் முன்கூட்டியே மே.17 அன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்த்தில் உருவான இந்தப் படம் வரும் மே.14 ஆம் தேதி கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிற நாடுகளை விட 6 நாள்கள் முன்பு இந்தியத் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:மறுவெளியீட்டில் ரூ.10 கோடியைக் கடந்த சச்சின்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments