FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது: இயக்குநர் ஞானவேல்

பஹல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் கருத்து.

Updated On : 28 ஏப்ரல் 2025, 5:05 pm IST
நிகழ்ச்சியில் பேசும் டி.ஜே. ஞானவேல்.
பகிர்:

பஹல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் கருத்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது

Advertisement

Advertisement

மே 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், சசிகுமார், விஜய் ஆண்டனி, சமுத்திரகனி, ஞானவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் டி. ஜே. ஞானவேல், ”போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது. அது என்ன அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று தெரியாது. போருக்கான அடிப்படை அறத்தை மீறக்கூடாது. பெண்கள், நோயாளிகள், கால்நடைகள் அப்புறப்படுத்திவிட்டுதான் போரை அறிவிக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுலா தளத்தில் பாதுகாப்பில்லை, மருத்துவத்துக்காக வந்த பாகிஸ்தானிய குழந்தையை 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்ற துரதிஷ்டமும் அதில் வருகிறது. ஒரு விளைவு மற்றொரு விளைவை ஏற்படுத்துகிறது.

போரால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான அதிர்வுகளின் பாதிப்புகள் அதிகம். போர் பற்றிய வலிகளை இப்படம் சொன்னாலும் நகைச்சுவையாக கதை எடுக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

இயக்குநர் ஞானவேல் பேசிய விடியோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: 96 - 2 படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments