முகப்பு
செய்திகள்

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

Updated On : 12 ஆகஸ்ட் 2025, 6:37 pm IST
ராமேஸ்வரத்தில் லோகேஷ் கனகராஜ் - படம் - எக்ஸ்
பகிர்:

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

கூலி திரைப்படம் நாளை மறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ளதையொட்டி, இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த நிலையில், சாமி தரிசனத்திற்காக ராமேஸ்வரத்திற்கு அவர் சென்றுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் உலகம் முழுவதும் ஆக. 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படம் என்பதற்கேற்ப இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகர்ஜுனா, ஆமீர்கான், உபேந்திரா, செளபின் சாஹிர் என மற்ற மொழி நடிகர்களும் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

லியோ படம் வசூல் ரீதியாக வெற்றியாக இருந்தாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இணைய தளங்களில் செய்யப்பட்டுள்ள டிக்கெட் முன்பதிவுகளே இதற்கு சான்றாக உள்ளன.

இப்படத்துக்கான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின் விடியோக்கள் நேற்றுமுதல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. சமூக வலைதளங்களில் கூலி படத்தைப் பற்றிய விடியோக்களும் புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

இதனிடையே ராமேஸ்வரம் கோயிலில் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்த விடியோவையும் ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க | மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!

summary

Director Lokesh kanagaraj in rameswaram temple ahead of cooli release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments