கில்லர் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
கில்லர் படப்பிடிப்பு குறித்து...
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, கில்லர் என்கிற படத்தின் மூலம் மீண்டும் இயக்குராக களமிறங்கியுள்ளார்.
Advertisement
Advertisement
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
இந்த நிலையில், கில்லர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். இது முடிந்ததும், மீண்டும் கில்லர் படப்பிடிப்பைத் துவங்குவார்.
இதையும் படிக்க: ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!
sj surya's killer movie schedule shoot wrapped
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.