வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!
வடசென்னை 2 - அன்புவின் எழுச்சி அப்டேட் குறித்து இயக்குநர் வெற்றிமாறன்
வ்டசென்னை 2 படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பு மற்றும் நடிப்பில் 2018 ஆம் ஆண்டில் வெளியான வடசென்னை, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான வடசென்னை 2 - அன்புவின் எழுச்சிக்காக ரசிகர்கள் நீண்டகாலமாகவே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், வடசென்னை 2 படத்தின் அறிவிப்பு குறித்து வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவர் கூறுகையில்,
எனது அடுத்த படத்தின் அப்டேட் இன்னும் 10 முதல் 15 நாள்களில் வெளியாகும். அது முடிந்ததும் வடசென்னை 2 படம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
நடிகர் சூர்யாவுடனான வாடிவாசல் படம் தள்ளிக்கொண்டே போகும்நிலையில், நடிகர் சிம்புவின் 49 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்தப் படமும் கைவிடப்பட்டதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில், வெற்றிமாறனின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.
VadaChennai 2 update given by Director VetriMaaran
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.