நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்.  படம்: யூடியூப் / ரஜினி ஃபாலோவர்ஸ்.
செய்திகள்

நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா -2... ரஜினி கொடுத்த மாஸ் அப்டேட்!

நடிகர் ரஜினி படையப்பா படத்தின் 2-ஆம் பாகம் குறித்து பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரஜினி படையப்பா படத்தின் 2-ஆம் பாகம் நீலாம்பரி என்ற தலைப்பில் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறினார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மறுவெளியீடு செய்யப்படுகிறது.

நடிகர் ரஜினியின் 50-ஆவது ஆண்டு திரையுலக பயணம், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிச.12ஆம் தேதி படையப்பா மறுவெளியீடு செய்யப்படுகிறது.

இந்தப் படத்தில் நீலாம்பரி எனும் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்.

இந்நிலையில், இது குறித்து ரஜினி பேசும்போது கூறியதாவது:

முதல்பாகத்திலேயே நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தற்போது எல்லாமே 2.0 என எடுக்கிறார்கள். அதேபோல் ஏன் படையப்பா 2 எடுக்கக் கூடாது எனத் தோன்றியது.

நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா 2 படத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம். எல்லாம் சரியாக அமைந்தால், படம் நிச்சயமாக வரும். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.

Actor Rajinikanth said that the second part of the film Padayappa is being planned under the title Neelambari.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

SCROLL FOR NEXT