FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ. 150 கோடியைக்கூட வசூலிக்காத கேம் சேஞ்சர்!

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் வசூல் குறித்து...

21 ஜனவரி 2025, 1:06 pm IST
பகிர்:

நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் வணிக ரீதியிலான தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.

இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படமாக இந்தப் படம் ஜன. 10 வெளியானது. அரசியல் கதையாக உருவான இது கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Advertisement

Advertisement

இதனால், வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், முதல் நாள் வசூலாக கேம் சேஞ்சர் ரூ. 186 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், உண்மையில் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் திரையரங்க வசூலில் இதுவரை ரூ. 150 கோடிகூட வசூலிக்கவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் ரூ. 170 கோடிக்கும் அதிகமாக கூறப்பட்டிருந்ததால் அதனை முறியடிக்கும் நோக்கத்துடன் போலியான வசூல் நிலவரத்தை தில் ராஜு வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குழப்பங்களுக்கு இடையே, தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் என அடுத்தடுத்த தோல்விப்படங்களைக் கொடுத்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments