FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாரி தொடரில் ஆஷிகாவுக்கு பதிலாக பிரபல நடிகை!

மாரி தொடரில் நாயகியாக நடித்துவந்த நடிகை ஆஷிகா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.

22 ஜனவரி 2025, 4:54 pm IST
ஆஷிகாவுக்கு பதிலாக களமிறங்கும் புதிய நடிகை - படம் | இன்ஸ்டாகிராம்
பகிர்:

மாரி தொடரில் நாயகியாக நடித்துவந்த ஆஷிகா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.

மாரி தொடரிலிருந்து ஆஷிகா வெளியேறுவது அத்தொடருக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக பிரபல நடிகையை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2022 ஜூலை முதல் மாரி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆஷிகா கோபால் படுகோனே நாயகியாகவும் ஆதர்ஷ் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மூடநம்பிக்கைகளை மையப்படுத்தி அமானுஷ்ய காட்சிகள் கொண்ட திரைக்கதையுடன் மாரி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக 800 எபிஸோடுகளைக் கடந்து மாரி தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில், இத்தொடரில் இருந்து விலகுவதாக நடிகை ஆஷிகா அறிவித்தார்.

புதிய தொடர்களில் நடிப்பதற்காக ஆஷிகா, இத்தொடரில் இருந்து விலகியிருக்கலாம் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இனி மாரியாக நடிக்க போவது யார்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் மாரி தொடரில் ஆஷிகாவுக்கு பதிலாக நடிகை பிரியங்கா நல்காரி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியின் ரோஜா தொடருக்குப் பிறகு ஜீ தமிழில் நளதமயந்தி தொடரில் பிரியங்கா நடித்துவந்தார். பின்னர் தனிப்பட்ட காரணங்களால் அந்தத் தொடரிலிருந்து விலகினார்.

பிரியங்கா நல்காரி - இன்ஸ்டாகிராம்

ரசிகர்கள் மீண்டும் பிரியங்கா நல்காரியைக் காண ஆவலுடன் இருந்த நிலையில், ரோஜா 2 தொடரில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் இந்தத் தொடர் யூடியூபில் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே தற்போது மாரி தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸுக்குப் பிறகு அன்ஷிதாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments