FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முதலில் உங்கள் சாதியில் இதை செய்யுங்கள்... பா. இரஞ்சித்துக்கு மோகன். ஜி பதில்!

இயக்குநர் மோகன். ஜி பேட் கேர்ள் படத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளார்...

Updated On : 27 ஜனவரி 2025, 1:19 pm IST
பகிர்:

இயக்குநர் மோகன். ஜி பேட் கேர்ள் படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் பேட் கேர்ள் (bad girl).

இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகளையும் காதல் தேர்வுகளையும் மையமாக வைத்து படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நாயகியாக அஞ்சலி சிவராமன் நடித்துள்ளார். அமித் திரிவேதி இசையமைப்பில் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காய்ஷப் இணைந்து வழங்கும் இப்படத்தின் டீசர் நேற்று (ஜன. 26) வெளியிடப்பட்டது.

இந்த டீசரை பகிர்ந்த இயக்குநர் பா. இரஞ்சித், “பேட் கேர்ள் திரைப்படத்தைப் பார்த்தேன். மிகவும் தைரியமான, புத்துணர்ச்சியான படம். இதனை தயாரித்ததற்காக இயக்குநர் வெற்றி மாறன் பெரிய வரவேற்புக்கு தகுதியானவர். இப்படம் பெண்களின் போராட்டங்களையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் புதிய அலை சினிமா பாணியில் தனித்துவமாக சித்திரிக்கிறது. இயக்குநர் வர்ஷாவுக்கு வாழ்த்துகள். நடிகை அஞ்சலி சிவராமன் அற்புதமாக நடித்திருக்கிறார். தவற விடாதீர்கள்!” எனப் பதிவிட்டார்.

இப்பதிவைப் பகிர்ந்த இயக்குநர் மோகன். ஜி, “பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்திரிப்பது இந்தக் குழுவினருக்கு எப்போதும் தைரியமான புத்துணர்ச்சியூட்டும் படமாகவே இருக்கும். வெற்றி மாறன், அனுராக் காஷ்யப் குழுவினரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பிராமண தந்தை மற்றும் தாயை பழிவாங்குவது ஒன்றும் புதுமையானது அல்ல பழையது. உங்கள் சொந்த சாதி பெண்களிடம் இதை முயற்சித்து, உங்கள் குடும்பத்தினருக்கு முதலில் காட்டலாம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments