பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகள் குறித்து...
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தான் காதலில் இருப்பதை உறுதிசெய்துள்ளார். ஆனால், அவர் ரஷ்மிகா பெயரைக் குறிப்பிடவில்லை.
Advertisement
Advertisement
இருவருமே இதுவரை வெளிப்படையாக தங்களின் காதல் குறித்து எங்கேயும் பேசவில்லை என்பதும் குறிப்பிடவில்லை.
ரஷ்மிகாவின் பாராட்டும் விஜய் தேவரகொண்டா வைத்த பட்டப்பெயரும்...
ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலரைப் பகிர்ந்த ரஷ்மிகா, “ஜூலை 31 வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. விஜய் தேவரகொண்டாவிடம் நெருப்பைப் பார்க்க முடிகிறது.
அனிருத், கௌதம் தின்னனுரி, விஜய் என 3 அறிவுஜீவிகள்... இவர்கள் கூட்டணியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு விஜய் தேவரகொண்டா, “ருஷிலு... (Rushhielu) ஹார்டின் எமோஜி... கிங்டம் டிரைலரைப் பார்த்து மகிழ்” எனக் கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் பாராட்டும் ரஷ்மிகா வைத்த பட்டப்பெயரும்...
இதற்கு முன்பாக மைசா போஸ்டரை பகிர்ந்து விஜய் தேவரகொண்டா,” இது பயங்கரமாக இருக்கப்போகிறது” என வாழ்த்தியிருந்தார்.
அந்தப் பதிவைப் பகிர்ந்த ரஷ்மிகா, “விஜூ.... (Vijuuu) இந்தப் படத்தில் நான் உன்னைப் பெருமைப்பட வைப்பேன்” எனக் கூறியுள்ளார்.
இருவருமே சமூக வலைதளங்களில் இப்படி பாராட்டிக் கொள்வதும் கொஞ்சிக் கொள்வதும் காதலை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
கிங்டம் திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இருவரும் காதலை எப்போது பொதுவெளியில் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
Vijay Deverakonda and Rashmika's cute posts and adorable nicknames are attracting attention on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.