அய்யனார் துணை  படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடர் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடர் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் கதையின்படி சிறப்புக் காட்சியாக எடுக்கப்பட்டுள்ள பாகம் மட்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.

இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது.

இதனிடையே இத்தொடரில் அடுத்தடுத்து உள்ள சகோதரர்களுக்கு திருமணக் காட்சிகள் இடம்பெறவுள்ளன. இதன் சிறப்புக் காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சி என்பதாலும், திருப்புமுனை அமைய வாய்ப்புள்ள காட்சி என்பதாலும் தனியாகத் தெரியவேண்டும் என்பதற்காக அந்தக் காட்சியுடைய எபிஸோட் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ளது. இதனால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT