மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!
விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மகாபாரதம் நாள்தோறும் காலை ஒளிபரப்பாகவுள்ளது குறித்து...
விஜய் தொலைக்காட்சியில் 'மீண்டும் மகாபாரதம்' நாள்தோறும் காலை ஒளிபரப்பாகவுள்ளது.
காலைப் பொழுதை பக்திமயமாக்கும் நோக்கத்தில் ஒரு மணிநேரம் இடைவிடாது ஒளிபரப்பவுள்ளதாக தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வியாசர் எழுதிய மகாபாதரதத்தை மையமாக வைத்து கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தார்த் ஆனந்த் குமார் மற்றும் அமர்பிரீத் ஆகிய இரு இயக்குநர்கள் மகாபாரதத்தை இயக்கினர்.
Advertisement
Advertisement
இந்தி மொழியில் எடுக்கப்பட்டாலும், இந்தத் தொடரின் திரைக்கதை வடிவம் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்ததால், தமிழ் மொழியில் குரலாக்கம் செய்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தமிழிலும் மகாபாரத்த்திற்கு பெருமளவு வரவேற்பு இருந்தது. இதில் இடம்பெற்ற பாடல்களும், வசனங்களும், கிருஷ்ணரின் உபதேசங்களும் இத்தொடர் தமிழில் எடுக்கப்பட்டதைப்போன்ற உணர்வை பார்வையாளர்களுக்குக் கொடுத்ததால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இந்த மகாபாரதம் இருந்தது.
துரியோதனன் சபையில் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்பது, பாஞ்சாலி சபதம் விடுவது, திரெளபதிக்கு கிருஷ்ணர் சேலை கொடுத்து உதவுவது, போர்க்காட்சிகள் என பல காட்சிகள் பெரிதும் கவனம் பெற்ற நிலையில், 267 எபிஸோடுகளுடன் மகாபாரதம் முடிக்கப்பட்டது.
இந்த இதிகாசத் தொடர், மீண்டும் மகாபாரதம் என்ற பெயரில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் மறுபடியும் ஒளிபரப்பாகவுள்ளது. நாள்தோறும் காலை 7 - 8 மணி வரை, ஒரு மணிநேரம் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என முன்னோட்ட விடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mahabharata will be telecast for one hour every morning Vijay TV
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.