FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந்த ஜோதிகா!

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் ரசிகையின் ரீல்ஸில் கமெண்ட் செய்துள்ளார்.

Updated On : 14 மார்ச் 2025, 5:52 pm IST
ஷாலினி, ஜோதிகா. - படங்கள்: இன்ஸ்டா / ஷாலினி, ஜோதிகா.
பகிர்:

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் ரசிகையின் ரீல்ஸில் பழைய நினைவுகளை கமெண்ட் செய்துள்ளார்.

தமிழில் அறிமுகமான ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்தபிறகு குறைவாகவே நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் முழு வீச்சில் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். உடற்பயிற்சியிலும் அசத்தி வரும் ஜோதிகா ஹிந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

கடைசியாக அவர் நடித்த சைத்தான் படம் ரூ.100 கோடி வசூலித்தது. சமீபத்தில் டப்பா கார்டெல் என்ற தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

யார் இந்த ஷாலினி?

இன்ஸ்டாகிராமில் செல்ஃபி ஷாலு எனும் ஷாலினியின் ரீல்ஸில் கமெண்ட் செய்துள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெண் ஷாலினி நடிகை ஜோதிகாவின் தீவிர ரசிகையாக அறியப்படுகிறார்.

பல விடியோக்களில் நடிகை ஜோதிகா மாதிரியே ஒப்பனை செய்தும் ஆடைகளை உடுத்தியும் அதேபோல் க்யூட்டாக நடனம் ஆடியுள்ளார்.

ஷாலினி. - படம்: இன்ஸ்டா / ஷாலினி

ஷாலியின் ரசிகர்கள் பலரும் அவரை “குட்டி ஜோதிகா” எனும் அளவுக்கு புகழ்கிறார்கள்.

சமீபத்தில் சென்னையில் நாடகக் குழுவில் சிறப்பாக நடித்திருந்தார். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சேரன் பாராட்டி பேசினார்கள்.

குஷி பட நினைவுகளைப் பகிர்ந்த ஜோ

இந்நிலையில் ஷாலினியின் குஷி பட ரீல்ஸுக்கு ஜோதிகா கமெண்டில் கூறியதாவது:

ஹாய் ஷாலினி, நீங்கள் மிகவும் போற்றுதலுக்குரியவராக இருக்கிறீர்கள். உங்களது ரீல்ஸ் எனக்கு பழைய நினைவுகளை தூண்டியுள்ளது.

இந்த நடனத்தை விரைவாக முடிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் சூரியன் மறையும் நேரமது. ராஜூ மாஸ்டரின் நடன அசைவுகள் எனக்கு எப்போதுமே கடினம். பாடல்வரிகளும் வேகமாக இருக்கும்! நான் கண்டிப்பாக சொல்கிறேன் நீங்கள் மிக மிக க்யூட் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments