பா. இரஞ்சித்தின் வேட்டுவம் அப்டேட்!
வேட்டுவம் அப்டேட் குறித்து...
வேட்டுவம் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தங்கலானுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வேட்டுவம் என்கிற படத்தின் பணிகளைத் துவங்கினார்.
Advertisement
இதில், நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அபிநயா!