செய்திகள்

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

தேசிய விருது குறித்து பிரகாஷ் ராஜ் பேசியவை...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரகாஷ் ராஜ் தேசிய விருதுகளைக் கடுமையாகச் சாடிப் பேசியிருக்கிறார்.

கேரள அரசின் மாநிலத் திரைத்துறை விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகருக்கான விருது மம்மூட்டிக்கும் சிறந்த நடிகைக்கான விருது ஷம்லா ஹம்சாவுக்கும் அறிவிக்கப்பட்டது. முக்கியமான, மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் 9 விருதுகளை வென்று அசத்தியது.

இந்த விருதுக்குழுவின் தலைவராக பிரகாஷ் ராஜ் செயல்பட்டார். அவரது முடிவுகளின்படியே விருதுகளும் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

விருது அறிவிக்கப்பட்ட நிகழ்வில் பேசிய பிரகாஷ் ராஜ், “இந்த விருதுக்குழுவின் தலைவராகச் செயல்பட என்னை அழைத்து, என் முடிவில் யாரும் தலையிட மாட்டார்கள் என்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஃபைல்ஸ் எனப் பெயரிட்ட குப்பைகளுக்கு தேசிய விருதுகள் கொடுக்கப்படும்போது அந்த விருதுகள் மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தகுதியானவை அல்ல என்பதையே காட்டுகிறது.

தேசிய திரைப்பட விருதுகள் சமரசம் செய்யப்பட்டவை என்பதைச் சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது” எனத் தெரிவித்தார். பிரகாஷ் ராஜ்ஜின் இக்கருத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

prakash raj spokes about national awards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

பிப். 21-இல் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா: பந்தல்கால் நடவு

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

சுங்குவாா்சத்திரத்தில் உலக கம்மா மாநாடு

இன்றைய தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT