தோட்டா தரணி 
செய்திகள்

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது!

தோட்டா தரணிக்கு செவாலியே விருது...

இணையதளச் செய்திப் பிரிவு

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியளவில் பிரபலமான கலை இயக்குநர் தோட்டா தரணி. ஓவியரான இவர் கலை இயக்குநராக பல சாதனைகளையும் ஆச்சரியப்படுத்தும் செட் அமைப்புகளையும் செய்தவர்.

தோட்டா தரணி செட் என்றால் உண்மையைவிட தத்ரூபமாக இருக்கும் என்கிற அளவிற்கு பல மொழிகளிலும் கலை வடிவமைப்பை மேற்கொண்டு விருதுகளையும் வென்றிருக்கிறார்.

முக்கியமாக, நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற தாராவி காட்சிகளெல்லாம் சென்னையில் அமைக்கப்பட்டவைதான். மேலும், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திர போராட்டக் காட்சிகள் உள்பட பலவற்றை தத்ரூபமாக செட் போட்டு அசத்தியவர் தோட்டா தரணி. சிவாஜியில் இடம்பெற்ற, ‘வாஜி.. வாஜி..’ பாடலை மறக்க முடியுமா?

சிவாஜி பாடல் செட்டில் தோட்டா தரணி

காதலர் தினம், தசாவதாரம், பொன்னியின் செல்வன் என காலகட்டத்திற்கு ஏற்ற திரைப்படங்களுக்கான கலை இயக்குநர் பட்டியலில் முதல் தேர்வாக இன்றும் தோட்டா தரணியே முன்னணியில் இருக்கிறார். இறுதியாக, குபேரா, ஹரிஹர வீர மல்லு, காட்டி ஆகிய படங்களுக்கு கலை வடிவமைப்பு செய்திருந்தார்.

மிகச்சிறந்த வடிவமைப்பு திறனும் வரலாற்று அறிவும் உள்ளவர் என்பதாலேயே பல இயக்குநர்கள் கதை, உருவாக்க விவாதங்களிலும் தோட்டா தரணியிடம் ஆலோனைகளையும் பெறுகின்றனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பின் மூலம் திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 13 அன்று சென்னையிலுள்ள பிரான்ஸ் அலையன்ஸ் வளாகத்தில் பிரான்ஸ் தூதர் இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்கவுள்ளார். அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸின் இந்த செவாலியே விருதை தமிழில் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

french chevalier award announced to senior art director thotta tharani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுப்பிக்கப்படும் பார்சிலோனா திடலைப் பார்வையிட்ட மெஸ்ஸி உருக்கம்!

தேர்தல் ஆணையம் SIR பணிகளைத் தொடரலாம்!: உச்சநீதிமன்றம்! | செய்திகள்: சில வரிகளில் | 11.11.2025

குத்துப் பாட்டுக்கு நடனமாடியுள்ள ஸ்ரேயா..! புஷ்பா சமந்தாவை விஞ்சுவாரா?

தில்லி கார் வெடிப்புக்கு ஆதரவு? சமூக வலைதளங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்

முதல் ஒருநாள்: சதம் விளாசிய சல்மான் அகா; இலங்கைக்கு 300 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT