லட்சங்களில் முதலீடு! கோடிகளில் வசூல்... இந்தாண்டின் பெரிய வெற்றிப்படம் இதுவா?
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் குறித்து....
இந்தாண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் அதிக லாபத்தை ஈட்டிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பான் இந்திய சினிமாக்களின் கை ஓங்க ஆரம்பித்ததிலிருந்து எந்த மொழியில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டாலும் அதனை பான் இந்திய வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரவே தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிடுகின்றன.
அப்படி, பல கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வணிக ரீதியாகக் கடும் நெருக்கடிகளைச் சந்தித்ததுடன் பெரிய தோல்விப் படமான கதைகளும் உண்டு.
Advertisement
Advertisement
ஆனால், இந்தாண்டில் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்ற திரைப்படங்களும் உண்டு.
முக்கியமாக, தமிழில் ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கன்னடத்தில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த சூ ஃப்ரம் சோ, ரூ. 30 கோடியில் உருவாகி ரூ. 320 கோடி ஈட்டிய மகாவதார் நரம்சிம்ஹா, மலையாளத்தில் ரூ. 35 கோடியில் எடுக்கப்பட்டு ரூ. 300 கோடி வசூலித்த லோகா, ஹிந்தியில் ரூ. 50 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ. 570 கோடி வசூலித்த சய்யாரா ஆகியவை அடங்கும்.
ஆனால், இப்படங்களை விட அதிக லாபம் ஈட்டிய ஒரு படம் இருக்கிறது. இயக்குநர் அங்கித் சாகியா இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் குஜராத்தி மொழியில் வெளியான ஆன்மீகத் திரைப்படமான லாலோ: கிருஷ்ண சதா சகாயதே (Laalo: Krishna Sada Sahaayate) ரூ. 50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இதுவரை ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.
இப்படம் 150 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது சினிமா வல்லுநர்கள் மற்றும் திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவே இந்தாண்டின் பெரிய ஹிட்டாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிக்க: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் 1 லட்சம் பேர்?
laalo - krishna sada sahayate movie collected more than rs. 75 crores
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.