வா வாத்தியார் இரண்டாம் பாடல்!
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது...
’வா வாத்தியார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக க்ருத்தி ஷெட்டியும், வில்லனாக சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வா வாத்தியாரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்னும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம்.
ஏற்கனவே, ஓடிடி தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் இயக்குநருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்ட தேதிக்கு வாத்தியார் வருவாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடலான ஆலப்பிக்கே உம்மாக் பாடல் வெளியாகியுள்ளது. கெளுத்தி எழுதிய இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார்.