ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் “மெண்டல் மனதில்” திரைப்படத்தின் “உயிரே உயிரே” எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மெண்டல் மனதில்”. இப்படத்தில், நடிகை மாதுரி ஜெயின் நாயகியாக நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் இப்படம் ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகின்றது. மேலும், இந்தப் படத்தில் நடிகை சீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “மெண்டல் மனதில்” திரைப்படத்தின் “உயிரே உயிரே” எனும் முதல் பாடலை, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி புதன்கிழமை (பிப். 25) வெளியிட்டுள்ளார்.
'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் - ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணியால் இருவரின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.