காந்தாரா சேப்டர் 1 போஸ்டர்.  படம்: எக்ஸ் / ஹொம்பாலே பிலிம்ஸ்.
செய்திகள்

இந்திய சினிமா இதுவரை கண்டிராதது... காந்தாரா பற்றி சந்தீப் வங்கா!

காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் குறித்து இயக்குநர் சந்தீப் கூறியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் குறித்து இயக்குநர் சந்தீப் வங்கா மாஸ்டர்கிளாஸ் எனக் கூறியுள்ளார்.

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் நேற்று (அக்.2) உலகம் முழுவதும் வெளியானது.

பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

உருவாக்க ரீதியாக மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து மொழிகளிலும் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கியமாக, ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் உள்ளிட்டோர் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரபல இயக்குநர் சந்தீப் வங்கா இந்தப் படம் குறித்து கூறியதாவது:

காந்தாரா சேப்டர் 1 உண்மையான மாஸ்டர்பீஸ். இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று. சினிமாட்டிக் உடன் கூடிய இடி மின்னல் மழை, கரடுமுரடான, தெய்வீகம் மற்றும் அசைக்கமுடியாதது.

ரிஷப் ஷெட்டி தனியாளாக உருவாக்கி படத்தை தூக்கி நுறுத்தியுள்ளார். பின்னணி இசைக்காக அஜ்னீஷ்க்கு சிறப்பு பாராட்டுகள் எனக் கூறியுள்ளார்.

இதற்கு இயக்குநர் ரிஷப் ஷெட்டி , “நன்றி சகோதரா” எனக் கூறியுள்ளார்.

Director Sandeep Vanga has called the film kantara Chapter 1 is true masterclass.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

இது Middle Class மக்களின் கதை! Mask இயக்குநர் விக்ரணன் அசோக் - நேர்காணல்! | Kavin | Andrea

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

பிக் பாஸுக்குப் பிறகு... பவித்ரா ஜனனியின் புதிய தொடர்!

செபியில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT