முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!
இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியீடு தொடர்பாக...
தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பி பட்டியலில், அனுமன் தொடர், முன்னிலைப் பெற்றுள்ளது.
இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் அனுமன் தொடர், பல தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி, டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருந்தது. இந்தத் தொடர் நிறைவடைந்த நிலையில், மாற்றாக தொடங்கப்பட்ட அனுமன் தொடரும் டிஆர்பியில் முன்னிலை வகித்துள்ளது.
Advertisement
Advertisement
சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்தவகையில், தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர், 9.97 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சிங்கப் பெண்ணே தொடர் 9.43 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
அன்னம், கயல், மருமகள் ஆகிய தொடர்களின் சங்கமமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர், 9.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் தொடர், 9.10 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யானார் துணை, சிறகடிக்க ஆசை தொடர்கள் முறையே 7.66, 7.61 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது, ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனுமன் தொடர் 6.75 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் முறைய 6.31, 6.17 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று எட்டாவது, ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளன.
ஆடுகளம் தொடர் 5.10 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: பிக் பாஸ் சென்ற கமுருதீன்... மகாநதி தொடரில் திடீர் திருப்பம்!
The Hanuman series has topped the TRP charts in its first week of release.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.