நடிகர் துருவ்வின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கபடியை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் நடிகராக துருவ் நல்ல உழைப்பைக் கொடுத்திருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையவுள்ளது என்பதால், துருவ்வின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், துருவ்வின் புதிய திரைப்படத்தை டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, அவர் ரவி மோகனை வைத்து கராத்தே பாபு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் வெளியீடு முடிந்ததும் துருவ்வுடன் இணையலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கவர்ந்த டியூட் சரத் குமார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.