FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மல்லி தொடரில் இணையும் சந்திரலேகா நடிகை!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாகஸ்ரீ, மல்லி தொடரில் இணையவுள்ளார்.

Updated On : 1 செப்டம்பர் 2025, 5:48 pm IST
நாகஸ்ரீ - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாகஸ்ரீ, மல்லி தொடரில் இணையவுள்ளார்.

சந்திரலேகா தொடருக்குப் பிறகு இதயம் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நாகஸ்ரீ, தற்போது மல்லி தொடரில் இணையவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மல்லி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நிகிதா ராஜேஷ் நாயகியாகவும் விஜய் வெங்கடேசன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மகாலட்சுமி சங்கர், நளினி, நிரஞ்சனா, பாரதி மோகன், கிருத்திகா உள்ளிட்ட பலரின் நடிப்பும் இத்தொடரிக்கான ரசிகர்களைத் தக்கவைத்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி அதிக ரசிகர்களைக் கவர்ந்த சந்திரலேகா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாகஸ்ரீ, மல்லி தொடரில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லி தொடர் - இன்ஸ்டாகிராம்

சந்திரலேகா தொடருக்குப் பிறகு இதயம் தொடரில் நடித்து கவனம் பெற்ற நாகஸ்ரீ, பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மல்லி தொடரில் இணைந்துள்ளார்.

நாகஸ்ரீ - இன்ஸ்டாகிராம்

மல்லி தொடரில் ரேணுகா என்ற பாத்திரத்தில் நாகஸ்ரீ நடிக்கவுள்ளதால், மல்லி தொடரில் மேலும் பல புதிய திருப்பங்களை உருவாக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்படும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

மல்லி தொடரில் இணைந்துள்ள நாகஸ்ரீக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

summary

Chandralekha actress Nagashree act in malli

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments