பிக் பாஸ் செல்ல மாட்டேன், வதந்திகளை நம்பாதீர்: நடிகை லட்சுமி பிரியா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், நடிகை லட்சுமி பிரியா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், நடிகை லட்சுமி பிரியா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை, அதற்காக தான் எந்தவொரு ஆடிஷனுக்கும் செல்லவில்லை என்றும், பங்கேற்குமாறு எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் நடிகை லட்சுமி பிரியா நாயகியாக நடித்து வருகிறார். சுவாமிநாதன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடித்துவரும்போதே, விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் லட்சுமி பிரியா பங்கேற்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வந்தது. தற்போது இது குறித்து லட்சுமி பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லவுள்ளதாகத் தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. நான் எந்தவொரு ஆடிஷனுக்கும் செல்லவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எந்தவொரு அழைப்பும் எனக்கு வரவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9 போட்டியாளராகும் சின்ன திரை நடிகை?
Mahanadhi serial actress lakshmi priya not participated in bigg boss 9
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.