முகப்பு
செய்திகள்

வெனிஸ் திரைப்பட விழாவில் வரலாறு படைத்த இந்தியர்..! வாழ்த்திய ஆலியா பட்!

வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இந்தியர் குறித்து...

Updated On : 9 செப்டம்பர் 2025, 3:50 pm IST
வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இந்தியர். - படங்கள்: இன்ஸ்டா / ஆலியா பட், ஏஎன்ஐ.
பகிர்:

வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை இந்தியரான அனுபர்னா ராய் வென்று அசத்தியுள்ளார்.

வரலாறு படைத்த இவருக்கு ஆலியா பட் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வெனிஸ் திரைப்பட விழா மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக திரைத்துறையில் அறியப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் “சாங்ஸ் ஆஃப் ஃபர்கெட்டன் ட்ரீஸ்” எனும் படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை அனுபர்னா ராய் வென்றுள்ளார். Songs of Forgotten Trees poster.

Advertisement

Advertisement

சாங்ஸ் ஆஃப் ஃபர்கெட்டன் ட்ரீஸ் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / ஆலியா பட்,

அறிமுக / வளர்ந்துவரும் இயக்குநர்களுக்கான ஒரிஜான்டி பிரிவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

பிபான்ஷு ராய், ரோமில் மோடி, ரஞ்சன் சிங் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை அனுராக் காஷ்யப் வழங்கியிருந்தார்.

வெனிஸ் திரைப்பட விழாவில் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியராக அனுபர்னா ராய் சாதனை படைத்துள்ளார்.

இந்த விருது குறித்து ஆலியா பட் தன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

சாங்ஸ் ஆஃப் ஃபர்கெட்டன் ட்ரீஸ் எனும் படத்திற்காக வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற அனுபர்னா ராய்க்கு மிகப்பெரிய வாழ்த்துகள்.

இந்திய சினிமாவுக்கு என்ன அழகான ஒரு தருணம். வரலாறு. வாழ்த்துகள் அனுபர்னா ராய் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆலியா பட் அடுத்ததாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘லவ் அன்ட் வார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஆல்பா எனும் படம் வெளியாகவிருக்கிறது.

summary

Actor Alia Bhatt has congratulated filmmaker Anuparna Roy for her best director win at the Venice International Film Festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments