செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையைப் பேசும் காந்தாரா - 1!

காந்தாரா - 1 கதை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சேப்டர் - 1 படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1990-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.

கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் - 1’ படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தப் படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் 1000 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளைமேக்ஸில் ரிஷப் ஷெட்டி 1000 போர் வீரர்களுடன் மோதுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

kantara chapter 1 story has been staged in back to 1000 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

வர்த்தக ஒப்பந்தம்! இந்தியா - அமெரிக்க அமைச்சர்களின் முரணான பேச்சால் குழப்பம்!

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங் காங்!

சார்லி கிர்க் கொலை: உயர் ரக துப்பாக்கி கண்டெடுப்பு! குற்றவாளி கல்லூரி மாணவர் என சந்தேகம்?

மறைந்த நடிகர்கள் விஷ்ணுவர்தன், சரோஜா தேவிக்கு கர்நாடக அரசு விருது!

SCROLL FOR NEXT