செய்திகள்

இது நடந்தால் மட்டுமே 96 - 2 உருவாகும்: பிரேம் குமார்

96 - 2 திரைப்படம் குறித்து....

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் பிரேம் குமார் 96 - 2 குறித்து பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக, நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், கொஞ்சம் தாமதமாகவுள்ளது.

இதற்கிடையே, 96 திரைப்படத்தின் ரசிகர்கள் ராமும் (விஜய் சேதுபதி) ஜானுவும் (த்ரிஷா) என்ன ஆனார்கள் என பிரேம் குமாரிடம் கேட்பதுடன் 96 - 2 படத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரேம் குமார், “96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். நான் எழுதியதிலேயே மிகச் சிறப்பாக வந்த கதை இதுதான். பலரும் படித்துவிட்டு 96-யை விட நன்றாக இருக்கிறது என்றனர்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கதையைப் படித்துவிட்டு சில லட்சங்கள் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை அணிவித்தார். கதைக்காக மட்டுமே கிடைத்த பரிசு அது. ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட என்ன வேண்டும்? ஆனால், 96 திரைப்படத்தில் நடித்தவர்களை வைத்தே 96 - 2 பாகத்தை எடுப்பேன். அப்படியில்லை என்றால் 96 - 2 உருவாகாது” எனத் தெரிவித்துள்ளார்.

director prem kumar spokes about 96 sequel movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT