ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து!
ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது தொடர்பாக...
இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 12 ஆண்டுகள் சோ்ந்து வாழ்ந்த இவா்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு அறிவித்தனா்.
இதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி மனுதாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இதுதொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கி இருந்தது.
Advertisement
Advertisement
ஆறு மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் இந்த வழக்கு கடந்த செப்.25-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகி இருந்தனா். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் கூறியிருந்தனா். அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தாா்.
இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி தீா்ப்பளித்தாா்.
இதையும் படிக்க: கார்த்திகை தீபம் தொடரில் இணையும் கீர்த்தனா!
The Chennai Family Welfare Court has ruled in the divorce case filed by music composer G.V. Prakash and singer Sainthavi, granting them both a divorce.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.