கங்குலி பயோபிக் படப்பிடிப்பு துவக்கம்!
சௌரவ் கங்குலியின் பயோபிக் படப்பிடிப்பு துவங்கியுள்ளது குறித்து...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய படம் “தாதா”. இப்படத்தில், கங்குலியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்.
இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை லவ் ரஞ்சன் மற்றும் அன்குர் கார்க் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், “தாதா” திரைப்படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை (ஏப். 1) அன்று தொடங்கியுள்ளதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1992 முதல் 2008 ஆம் ஆண்டு வரை விளையாடிய வீரர் சௌவர் கங்குலி அவரின் ரசிகர்களால் “தாதா” என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.