நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமணம் ராஜஸ்தானில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். அதனை இருவரும் பல்வேறு தருணங்களில் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.
தற்போது, இருவருக்கும் வருகிற பிப். 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தத் திருமண நிகழ்வை ஆவணப்படமாக்கி வெளியிட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நடிகைகள் நயன்தாரா, காஜல் அகர்வாலின் திருமண நிகழ்வுகள் ஆவணப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.