முகப்பு
செய்திகள்

அயோக்கிய அரசியல்வாதிகள்... ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையில் அமீர்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் இயக்குநர் அமீர் கூறியதாவது...

Updated On : 8 ஜனவரி 2026, 3:03 pm IST
ஜன நாயகன் போஸ்டர், அமீர். - கோப்புப் படங்கள்.
பகிர்:

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் இயக்குநர் அமீர் ஒரு படத்தை தடைசெய்து ஒருவரை வழிக்குக் கொண்டுவரலாம் என நினைப்பவர்களை மிகவும் கேவலமானவர்கள் எனக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் நாளை (ஜன.9) வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் பொங்கலை முன்னிட்டு ஜன.9ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருந்தது.

Advertisement

Advertisement

வெளிநாட்டில் மட்டுமே முன்பதிவில் சுமார் ரூ.60 கோடி வரைக்கும் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்த நிலையில், படத்திற்கான சான்றிதழ் அளிக்காததால் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாளை (ஜன.9) காலை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

முதலில் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஜன நாயகனுக்கு ஆதரவாகப் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி, கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டார்கள்.

இந்நிலையில், இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் ஆஃப்பில் இது குறித்து கூறியதாவது:

ஒரு திரைப்படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் தடுத்துவிட்டால் அவர்களை தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணம் எவ்வளவு கேவலமானது!

தமிழ்நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்வார்கள். அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Regarding the Jana nayagan censorship certificate issue, director Ameer has stated that those who think they can ban a film and bring someone into line are utterly despicable.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments