முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

நிஜமாகவே பண மழையில் நனைந்த குஜராத்தி நாட்டுப்புற பாடகிகள்!

ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் தங்களது மனம் கவர்ந்த நாட்டுப்புற பாடகிகளை மேலும் உற்சாகப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மீது 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை மழை போல வர்ஷிக்க ஆரம்பித்தார்கள்.

Updated On : 27 டிசம்பர், 2016 at 5:55 PM
பகிர்:

நாடு முழுதும் ரூபாய் நோட்டு பிரச்சினையால் மக்கள் அவதிப் பட்டு வரும் சூழலில், குஜராத்தில் நடைபெற்ற ஒரு வினோத நிகழ்வு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் நவசாரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர்கள் கலந்து கொண்டு தங்களது பாடல்கள் மூலம் ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தனர். அப்போது ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் தங்களது மனம் கவர்ந்த நாட்டுப்புற பாடகிகளை மேலும் உற்சாகப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மீது 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை மழை போல வர்ஷிக்க ஆரம்பித்தார்கள்.

கடந்த ஞாயிறு அன்று ‘ஸ்ரீ கூர்ஜர ஷத்ரிய கடிய சமாஜ்’ எனும் அமைப்பின் சார்பின் நடத்தப் பட்ட இந்த இசை நிகழ்வில், ‘ஃபரிதா மிர்’ மற்றும் ‘மாயாபாய் அஹிர்’ எனும் இரு நாட்டுப்புற பாடகிகளும் பண மழையில் நனைக்கப் பட்டனர். முன்னதாக குஜராத்தின் பானஸ்கந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலன்பூரில் நாட்டுப்புற பாடகி ‘கிர்த்தி தன் காத்வி’ மீது ரசிகர்கள் புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை வீசி தங்களது இசை ஆர்வத்தை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத் தக்க விசயம். அந்த குறிப்பிட்ட இசை நிகழ்ச்சியில் பாடகிகள் மீது வர்ஷிக்கப் பட்ட பன மழையின் மொத்த மதிப்பு 47 லட்சம் ரூபாய்கள் எனவும், 1 கோடி ரூபாய்க்கும் மேலிருக்கலாம் எனவும் இரு விதமான தகவல்கள் இணையத்தில் உலவுகின்றன.

பண மழை வீடியோ...

Advertisement

video courtsy: india24/7 online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.