முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

மனமும் பஞ்ச பூதங்களும்

மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முதலில் மனதை நெறிப்படுத்த வேண்டியது அவசியம்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:46 AM
பகிர்:


மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முதலில் மனதை நெறிப்படுத்த வேண்டியது அவசியம். எந்த நீதி நூல்களைப் படித்தாலும் இந்த கருத்தே வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ஏன் மனதிற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது? இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களைக் கொண்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம். இந்த உலகம் எப்படி உருவானது என்பதை நமது புராணங்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறது. பிரபஞ்சம் முழுதும் நிரம்பி இருக்கக் கூடிய ஆகாயம் என்ற வெற்றிடத்திலிருந்து காற்று தோன்றியது. 

காற்றிலிருந்து நெருப்பு தோன்றியது. 

Advertisement

நெருப்பிலிருந்து நீர் தோன்றியது. 

நீரிலிருந்து மண் தோன்றியது. 

இந்த பிரபஞ்சம் என்பது அழிவை சந்திக்கும் போது, நான்கு யுகங்களும் முடிந்து உலகம் அழிந்து புதிய உலகு உருவாகும் போது அழிவு என்பது எப்படி தோன்றியதோ அப்படியே மறையும்.

கடல் பொங்கி இந்த நிலம் முழுவதையும் நீர் சூழும். 

ஒரு பெரு நெருப்பு எழுந்து நீரையும் மண்னையும் ஆவியாக்கும்.

மிகப்பெரும் சூராவளிக்காற்று எழுந்து நெருப்பை உள் வாங்கும். இவற்றை அப்படியே ஆகாயம் தன்னுள் இழுத்து அடக்கிக் கொள்ளும்.

இது சாத்தியமாவது அதன் வலிமையை சார்ந்ததாக இருக்கிறது. மண்னை அப்படியே கிடக்கும். மண்ணை விட தண்ணீர் சூட்சும சக்தி வாய்ந்தது. அது பக்கவாட்டில் பரவும். தண்ணீரை விட நெருப்பு சூட்சும சக்தி வாய்ந்தது. பக்கவாட்டில் மட்டுமல்லாது சிறிது மேலேயும் எழும்பும். நெருப்பை விட காற்று சூட்சும சக்தி வாய்ந்தது. எல்லா இடங்களிலும் பரவும். காற்றை விட ஆகாயம் சூட்சும சக்தி வாய்ந்தது. ஆகாயம் என்ற வெற்றிடம் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது. சரி! மனதிற்கும் இந்த உலகம் உருவானதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா. 

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. 

மனித உடலும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையே. 

ஆகாயத்திலிருந்து செவியும், காற்றிலிருந்து மெய்யும், நெருப்பிலிருந்து கண்ணும், நீரிலிருந்து சுவைக்கும் நாக்கும் நிலத்திலிருந்து மூக்கும் உருவாக்கப்பட்டன.

நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீரில் இருந்து மண் சத்தும் நீர் சத்தும் கிடைக்கிறது. வயிற்றில் உள்ள அமிலமானது நெருப்பாக செயல் புரிந்து உண்ணும் உணவை எரித்து உடல் இயங்க தேவையான வெப்பத்தை வழங்குகிறது. சுவாசிப்பதாலும், உணவிலிருந்தும், நீரிலிருந்தும் பிராண சக்தி கிடைக்கிறது. இதில் அதிக அளவு சுவாசத்திலிருந்து பெறப்படுகிறது. நமது உடலில் மொத்தம் ஒன்பது விதமான வாயுக்கள் உள்ளனவாம். 

இதில் ஐந்து வாயுக்கள் பிராண வாயு, அபாண வாயு, சமான வாயு, உதான வாயு மற்றும் வயான வாயு என்ற ஐந்தும் பஞ்சபூதங்களின் கூட்டமைப்பில் தோன்றியவை. நமது உடல் ஆகாய சக்தியை இந்த பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நமக்கு ஆகாய சக்தியை மீட்டுத் தருவது உறக்கம். 

ஆழ்ந்த உறக்கத்தில் ஆகாய சக்தி மீட்டெடுக்கப்படுகிது. எப்போது ஆகாய சக்தி உடலில் குறைகிறதோ அப்போது சோர்வு ஆட்கொண்டு தூக்கத்திற்கு இட்டுச் செல்கிறது.  ஆகாய சக்தியை மீட்க மற்றொரு வழி தியானம் மற்றும் மனம் ஒருமித்து செய்யக் கூடிய செயல்கள்.

மனம் என்பது நம்மில் இருக்கும் ஒரு சூட்சும பொருள். இதனை இயக்குவதற்கு சூட்சும சக்தியான ஆகாய சக்தி தேவைப்படுகிறது. எப்போது மனதில் எண்ண ஒட்டங்கள் அடங்குகிறதோ அப்போது உடலின் ஆகாய சக்தியின் சேமிப்பு அதிகரிக்கிறது. ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும் போதுதான் கற்பதை கிரகிக்க முடிகிறது.

மனதில் அளவிற்கும் அதிகமான துக்கம் போன்றவற்றால் ஆகாய சக்தி அதிக அளவில் உடலில் குறைவதையே நவீன மருத்துவத்தில் depression என்று அழைக்கிறார்கள். இதற்கு அளிக்கப்படும் மருந்துகள் மனதை சரி செய்யாது அதற்கு பதிலாக தூக்கத்தை அளித்து ஆகாய சக்தியை மீட்டெடுக்கும் பணியை மட்டுமே செய்கிறது. எனவே மனதை அமைதியாக வைத்துக் கொண்டால்தான் வாழ்வில் முன்னேற்றங்களை காண இயலும்.

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. 

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… 'இதுவே சனாதன தர்மம்'

ஆன்மிக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...! 

தொகுப்பு - கோவை ச. பாலகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments