கல்வி

பெண்கள் உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை

தினமணி

பெண்கள் பல்வேறு துறைகளில் அதிகாரம் பெற ஊக்கப்படுத்துவதற்காகவும் உயர் கல்வி பெறவும்  பேர் அண்ட் லவ்லி நிறுவனம் உதவித்தொகை வழங்கவுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு என்ற வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

10வது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ள பேர் & லவ்லி அறக்கட்டளை நாடு முழுவதிலுமிருந்தும் பெண்களிடமிருந்து உயர்கல்வியை மேற்கொள்வதற்காக பேர் & லவ்லி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுகிறது. இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் குறித்த தகவல்கள் www.fairandlovely.in என்ற தளத்தில் கிடைக்கப்பெறும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அகியவைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களை பெறுவதே இதற்கான குறைந்தபட்ச தகுதியாகும்.

விண்ணப்பிக்கும் முறை; www.fairandlovely.in என்னும் தளத்திலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். ஆர்வமுள்ள பெண்கள் 1800 220 130 என்னும் கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான இறுதித் தேதி 30 அக்டோபர், 2012 ஆகும். பின்வரும் முகவரிக்கும் விண்ணப்பங்கள் தபாலில் அனுப்பப்படலாம்: பேர் & லவ்லி ஸ்காலர்ஷிப்  2012, பேர் & லவ்லி அறக்கட்டளை, தபால் பெட்டி எண்.11281, மரைன் லைன்ஸ் தபால் அலுவலகம், மும்பை – 400 020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT