முகப்பு
கல்வி

கலசலிங்கம் பல்கலை.யில் வளாக நேர்காணல்: 53 மாணவர்கள் தேர்வு

சுதர்லேண்ட் குளோபல் சர்வீஸஸ் நிறுவனம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் 53 மாணவ மாணவியர் தேர்வு பெற்றனர்.

கல்வி

கலசலிங்கம் பல்கலை.யில் வளாக நேர்காணல்: 53 மாணவர்கள் தேர்வு

சுதர்லேண்ட் குளோபல் சர்வீஸஸ் நிறுவனம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் 53 மாணவ மாணவியர் தேர்வு பெற்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:21 AM
பகிர்:

சுதர்லேண்ட் குளோபல் சர்வீஸஸ் நிறுவனம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் 53 மாணவ மாணவியர் தேர்வு பெற்றனர்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக வந்து வளாக நேர்காணலை நடத்தி மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து அழைத்துச் செல்கிறது. தற்போது சுதர்லேண்ட் குளோபல் சர்வீஸஸ் நிறுவனம் 2012-13-ல் பி.டெக். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தியது. அவர்களின் தனித்திறன், குழு நேர்காணல், தனி நேர்காணல், தொலைபேசி நேர்காணல் உள்ளிட்டவற்றை நடத்தியது. இறுதியாக வளாக நேர்காணலில் பல்கலைக்கழகத்தின் பி.டெக்., சிவில், மெக்கானிக்கல், இ.இ.இ., இ.ஐ.இ., இ.சி.இ., கணினி அறிவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்த 53 மாணவ மாணவியர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்வு பெற்ற மாணவர்களை பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் பி.கன்னியப்பன், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →