சென்னை: 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் மாநிலம் முழுமைக்கும் பொதுவான காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டதைப்போன்றே இக்கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதையடுத்து 10,11,12 வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி நிறைவடைகிறது. செப்டம்பர் 11-ம் தேதி முதல் 23 வரை 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.