கல்வி

ஆதார் அடிப்படையில் வருகைப் பதிவு: ஹரியாணா அரசுக் கல்லூரிகளில் ஏப்ரல் 1 முதல் அமல்

ஹரியாணா மாநிலத்தில் அனைத்து அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வருகைப் பதிவு

DIN

ஹரியாணா மாநிலத்தில் அனைத்து அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வருகைப் பதிவு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹரியாணா உயர் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் சண்டீகரில் கூறியதாவது:
ஆதார் அடிப்படையிலான 10 பயோ மெட்ரிக் கருவிகளை ஒரு வாரத்துக்குள் வாங்குமாறு அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயோ மெட்ரிக் கருவிகளில் அங்கு பணிபுரிபவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட தகவல் மையம் அல்லது தேசியத் தகவல் மையத்தை கல்லூரிகளின் அதிகாரிகள் தொடர்பு கொள்ளலாம் என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

SCROLL FOR NEXT