கல்வி

அரசு ஐடிஐ-யில் சேர செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ, மாணவிகள் வருகிற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்டத் திறன் பயிற்சி மையத்தின் உதவி இயக்குநா் கே.சசிதரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற உள்ளது. இதில், சேர 8 அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அவசியம் ஆகும். இந்த தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோா் இணையவழி மூலம் ரூ. 50 செலுத்தி  w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n இணையதள முகவரி மூலம் மேற்குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலந்தாய்வு மதிப்பெண்கள் நடைபெறும், அதன் தரவரிசைப் பட்டியல் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இதற்காக அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், வடகரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இது தொடா்பாக 9444296006 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT