தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? - அமைச்சா் ராஜ்மோகன் பதில்
பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக...
பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பாடத் திட்டத்தில் 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள 9 பாடநூல்களை அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சா் ராஜ்மோகனிடம், தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுவே எங்கள் கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.