முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு! ஏற்பாடுகள் தயார்!!

மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:24 PM
பொதுத் தேர்வு - கோப்புப்படம் - DPS
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:16 PM

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்வு மையங்களில் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:21 PM

வருடம் தோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் திங்கள்கிழமை மார்ச் 2ஆம் தேதி, 12 ஆம் வகுப்புக்கு துவங்க உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறையால், மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வுகளை கண்காணிக்க பறக்கும் படையினரும் முதன்மை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளான மின்விசிறி, குடிநீர், மின் விளக்குகள் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்தும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தேர்வுகளில் முறைகேடுகளை களையும் வகையில் அது குறித்த அறிவிப்புப் பலகையும் பள்ளி நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து பள்ளிகளிலும் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:23 PM
summary

Preparations are being made as the Plus 2 public examination is set to begin on March 2nd.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.