கேரளத்தில் திருமணக் கோலத்தில் வாக்களித்த மணமக்கள்!
கேரளத்தில் திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த மணமக்களைப் பற்றி....
கேரளத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் மணமக்கள் இருவர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.9) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு ஊர்களில் இருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
Advertisement
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, கேரளத்தில் 62.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள வாழமுட்டம் வாக்குச்சாவடியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கைச் செலுத்துவதற்காக, புதுமணத் தம்பதியரான திவ்யஸ்ரீ மற்றும் அஷ்வந்த் லம்போதரன் ஆகியோர் காலை 9 மணிக்கு திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் வந்து வாக்களித்தனர்.
இவர்களைப் போலவே, வயநாடு மாவட்டத்தில் மேப்பாடியில் அகிலா - ஆண்டணி என்ற மணமக்களுக்கும் தங்களின் திருமணத்துக்கு முன்னதாகவே, தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தலில் வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க... புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!